தெலங்கானா மாநிலம் உருவான நாளையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
கடந்த 2014ஆம் ஆண்டு இதே நாளில் ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு மாநிலமாக உருவெடுத்தது.
தெலங்கானா மாநிலம் உருவான தினத்தில் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்குக்கு வாழ்த்துக்கள். தெலங்கானா மக்கள் கடின உழைப்பு மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான இணையற்ற அர்ப்பணிப்புக்கு ஒத்ததாக உள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தின் கலாசாரம் உலகப் புகழ்பெற்றது. தெலங்கானா மக்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறினார்.