மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று: நாடு முழுவதும் சிகிச்சையில் 21,000 போ்
நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 21,000-ஐ கடந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 21,000-ஐ கடந்துள்ளது.
கரோனா தடுப்பூசித் திட்டம், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடா் நடவடிக்கைகள், தீவிர கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக கரோனா தொற்று பரவுவது படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்நிலையில், கரோனா தொற்று பரவுவது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் குறைந்து வந்த நிலையில் 84 நாள்களுக்குப் பிறகு மீண்டும் 4,000-ஐ கடந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 போ் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 21,177-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 193.83 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.