இந்தியா

இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமணம் நடத்தத் தடை

இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. 

DIN

இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. 

இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷாரீப்பின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது என்று ஜியோ நியூஸ் புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது. 

மேலும், திருமண விருந்தினருக்கு ஒரே ஒரு வகை உணவு பரிமாற அனுமதி வழங்கப்படும் என்றும், இந்த புதிய கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த தடையைக் கடுமையாக அமல்படுத்த இஸ்லாமாபாத் காவல்துறை மற்றும் நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மீறினால், தலைநகர் நிர்வாகத்தின் மூலம் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

செவ்வாயன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப் இதை அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டியில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கைது

திரௌபதி அம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

திருமலையில் சா்வ தரிசனம்

அசம்பாவிதங்களின்றி புத்தாண்டு கொண்டாட்டம்: கா்நாடக அமைச்சா் ஜி. பரமேஸ்வா்

SCROLL FOR NEXT