இந்தியா

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

DIN

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். 

நெடுஞ்சாலையின் சங்கிராமா பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

மேலும், சங்கிராமாவின் புட்கா பகுதியில், வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த  5 துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

சரியான நேரத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு நிகழவிருந்த பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT