இந்தியா

மூஸேவாலா கொலை வழக்கு: சந்தேக நபர் கைது

DIN

பின்னணி பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தோஷ் ஜாதவ் மற்றும் ஜாதவின் உதவியாளர் நவ்நாத் சூர்யவன்ஷி ஆகியோரை புணே போலீசார் கைது செய்தனர். 

2021ஆம் ஆண்டு புணேவில் நடந்த கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான சந்தோஷ் ஜாதவ் பல மாதங்களாக தலைமறைவாக இருந்தார். 

இந்நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஜாதவ் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோர் ஞாயிறன்று குஜராத்தின் பூஜ் நகரிலிருந்த புணே கிராமப்புற காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கடந்த வாரம், புணே காவல்துறை ஜாதவின் உதவியாளர் சௌரப் மஹாகல் என்பவரை கைது செய்தது, அவர் மூஸேவாலா கொலையில் சந்தேகத்திற்கிடமானவர். பஞ்சாப்  மற்றும் மும்பை போலீசார் அவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

ஜாதவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்வதற்கு முன்பு புணே காவல்துறை கடந்த வாரம் குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு பல குழுக்களை அனுப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT