கர்நாடகத்தில் 21 அதிகாரிகளின் அலுவலகங்களில் சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சந்தேகிக்கப்படும் 21 அதிகாரிகளுக்கு சொந்தமான 80 இடங்களில் கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியதாக தெரிவித்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சந்தேகிக்கப்படும் 21 அதிகாரிகளுக்கு சொந்தமான 80 இடங்களில் கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியதாக தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொடங்கி இந்த சோதனையில் 300 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் முதலீட்டு ஆவணங்களைத் தவிர, மதிப்புமிக்க பொருள்கள் மற்றும் பணம் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
சோதனை செய்யப்பட்டவர்களில் நீர்ப்பாசனத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய துறைகளைச் சேர்ந்த பொறியாளர்களும் அடங்குவர்.
மேலும், காவல்துறை அலுவலர், மாவட்ட பதிவாளர், சாலை போக்குவரத்து அதிகாரி, நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர், கடக் மாவட்டத்தில் பஞ்சாயத்து கிரேடு-2 செயலாளர் மற்றும் கால்நடை துறையின் உதவி கட்டுப்பாட்டாளர் ஆகியோரும் அடங்குவர்.
தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால், எந்தவித தகவலும் வெளியிடவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.