கோப்புப்படம் 
இந்தியா

விரைவில் மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா மருந்து: பாரத் பயோடெக்

மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை முடிவுகள் நிறைவடைந்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். 

DIN


மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை முடிவுகள் நிறைவடைந்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பிரத்யேகமாகப் பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

"மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கான மருத்துவப் பரிசோதனைகளை முடித்துள்ளோம். அதன் தரவுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் தரவுகளை சமர்ப்பிக்கவுள்ளோம்.

அனைத்தும் சரியாக நடந்தால், அதை அறிமுகம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கும். உலகிலேயே பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்ட மூக்கின்வழி செலுத்தப்படும் முதல் கரோனா தடுப்பு மருந்தாக இது இருக்கும்" என்றார் அவர்.

மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கான மூன்றாவது கட்ட பரிசோதனை மேற்கொள்ள மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி மாதம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT