இந்தியா

விரைவில் மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா மருந்து: பாரத் பயோடெக்

DIN


மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை முடிவுகள் நிறைவடைந்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பிரத்யேகமாகப் பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

"மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கான மருத்துவப் பரிசோதனைகளை முடித்துள்ளோம். அதன் தரவுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் தரவுகளை சமர்ப்பிக்கவுள்ளோம்.

அனைத்தும் சரியாக நடந்தால், அதை அறிமுகம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கும். உலகிலேயே பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்ட மூக்கின்வழி செலுத்தப்படும் முதல் கரோனா தடுப்பு மருந்தாக இது இருக்கும்" என்றார் அவர்.

மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கான மூன்றாவது கட்ட பரிசோதனை மேற்கொள்ள மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி மாதம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT