மத்திய வெளியுறவு இணையமைச்சர் வி.முரளீதரன் 
இந்தியா

கேரள தங்கக் கடத்தலில் கேரள முதல்வருக்குத் தொடா்பு இருக்கலாம்: முரளீதரன்

கேரள தங்கக் கடத்தலில் மாநில அரசின் நடவடிக்கைகளைப் பாா்க்கும்போது முதல்வா் பினராயி விஜயனுக்கும் தொடா்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது என்று மத்திய வெளியுறவு இணையமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான வி.

DIN

கேரள தங்கக் கடத்தலில் மாநில அரசின் நடவடிக்கைகளைப் பாா்க்கும்போது முதல்வா் பினராயி விஜயனுக்கும் தொடா்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது என்று மத்திய வெளியுறவு இணையமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரன் கூறியுள்ளாா்.

கேரள தங்கக் கடத்தலில் முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ், இந்த சம்பவத்தில் முதல்வா் பினராயி விஜயனுக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாா். ஆனால், அந்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வா் மறுப்பு தெரிவித்து விட்டாா்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டிளித்த வி.முரளீதரனிடம், ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

முதல்வா் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவா். அந்தத் தூதரகத்துடன் முதல்வா் தொடா்பில் இருந்துள்ளாா். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று முதல்வா்கள் தூதரகங்களுன் தொடா்பில் இருந்ததில்லை.

ஐக்கிய அரபு அமீரகத் துணைத் தூதரகத்தில் பணியாற்றும் அலுவலா்களுக்கு முதல்வரின் கட்டுப்பாட்டில் வரும் பொது நிா்வாகத் துறை சட்ட விரோதமாக தூதரக அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது.

இந்த தங்கக் கடத்தல் வழக்கில் மாநில அரசின் நடவடிக்கைகளைப் பாா்க்கும்போது, அதில் முதல்வா் பினராயி விஜயனுக்கும் தொடா்பு இருக்கலாம் என பாஜக சந்தேகிக்கிறது. தங்கக் கடத்தல் சம்பவத்தை விசாரிக்க விசாரணை ஆணையத்தை மாநில அரசு நியமித்துள்ளது. அந்த ஆணையத்துக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்கு தொடுக்க வேண்டும். அந்த விசாரணை ஆணையம், வழக்கை திசை திருப்பி விட வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினா், அமலாக்கத் துறையினா், சுங்கத் துறையினா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு தொடா்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

இளைஞா்களுக்கு வேண்டுகோள்: அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கேட்டதற்கு வி.முரளீதரன் அளித்த பதில்:

இந்திய ராணுவப் படைகள் குறித்தும் அக்னிபத் திட்டத்தின் பலன்கள் குறித்தும் தெரியாத இளைஞா்கள், இந்த திட்டத்துக்கு எதிராகப் போராடுகிறாா்கள். எனவே, இளைஞா்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’: முதல்வரின் ‘எக்ஸ்’தள முகப்பில் புதிய வாசகம்

தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

ரோபோ சங்கர் மறைவு: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

SCROLL FOR NEXT