முகப்பு
இந்தியா

தில்லியில் மீண்டும் கரோனா அச்சுறுத்தல்: ஜனவரிக்குப் பிறகு முதன்முறையாக..

தில்லியில் கடந்த ஜனவரிக்குப் பிறகு முதன்முறையாக இன்று (திங்கள்கிழமை) தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 10-ஐ தாண்டியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் கடந்த ஜனவரிக்குப் பிறகு முதன்முறையாக இன்று (திங்கள்கிழமை) தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 10-ஐ தாண்டியுள்ளது. 

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,060 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் கடந்த ஜனவரி 26-ம் தேதி 10.59 சதவிகிதமாக இருந்தது. இதன்பிறகு, இன்று மீண்டும் 10 சதவிகிதத்தைத் தாண்டி 10.09 சதவிகிதமாக மாறியுள்ளது.

அங்கு இதுவரை மொத்தம் 19,23,149 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,221 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 18,91,536 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 26,238 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 5,375 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4,095 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 14,533 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 856 பேர் முதல் தவணையாகவும், 2,334 பேர் இரண்டாவது தவணையாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 11,343 பேர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.