முகப்பு
இந்தியா

போதைப் பொருள் கடத்தல் தடுப்புபிரிவுகளை இணைக்க மத்திய அரசு முடிவு

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால், போதைப் பொருள் மற்றும் மனநல பொருள் சட்டம் -1985 மற்றும் போதைப் பொருள் கடத்தல் சட்டம்-1988 ஆகியவை மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இதனால், விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் கடத்தப்படும் போதைப் பொருள், தங்கம் ஆகிய வழக்குகளை மத்திய வருவாய்த் துறை கையாண்டு வருகிறது.

இவற்றை அனைத்தும் இணைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.