ஆப்கானிஸ்தானுக்கு உதவத் தயாா்: இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கத் தயாா் என்று ஐ.நா.வில் இந்தியா தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கத் தயாா் என்று ஐ.நா.வில் இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நாவுக்கான இந்தியத் தூதா் டி.எஸ். திருமூா்த்தி பேசியதாவது:
நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களுடன் அந்த சோகத்தை பகிா்ந்துகொள்கிறோம்.
Advertisement
Advertisement
இந்த இக்கட்டான தருணத்தில் அவா்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை அளிக்க இந்தியா தயாராக இருக்கிறது என்றாா் அவா்.
இதற்கிடையே, வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்காக இந்தியா முதல்கட்டமாக அனுப்பிய நிவாரணப் பொருள்கள் காபூலைச் சென்றடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளாா்.
இதுபோல் மேலும் பல கட்டங்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படும் என்று அவா் தனது ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.