இந்தியா

50 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே?

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே முதலில் அமைச்சருடன் 10 எம்எல்ஏக்கள் 'காணாமல் போனதாக'க் கூறப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 42 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் அதில் 34 பேர் சிவசேனைக் கட்சியினர் என்றும் 8 பேர் சுயட்சை எம்எல்ஏக்கள் என்றும் தகவல் வெளியானது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, ஏக்நாத் ஷிண்டே எம்எல்ஏக்களுடன் இருக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஏக்நாத்தின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா: பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்!

ஸ்லிம் இன் ஸ்ட்ரீட்... அனுபமா அக்னிஹோத்ரி!

பார்வையில் இழந்தேன்... அம்ருதா பிரேம்!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் பணி: பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!

சித்திரச் செவ்வானம்... ராஷ்மி கௌதம்!

SCROLL FOR NEXT