இந்தியா

உதய்பூர் படுகொலை: என்.ஐ.ஏ. விசாரணை நடத்த உத்தரவு!

உதய்பூரில் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

DIN

உதய்பூரில் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தையல்காரர் கன்னையா லால். இவர் முகம்மது நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக நிர்வாகி நூபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, கன்னையா லால் நேற்று(செவ்வாய்க்கிழமை) கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டாா். மேலும் இந்த கொலையை விடியோவாகப்  பதிவிட்டு, இஸ்லாத்தை அவமதித்த காரணத்தால் கன்னையா லாலை பழிதீா்த்தாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பிரதமா் மோடிக்கும், பாஜகவிலிருந்து அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுா் சா்மாவுக்கும் அவா்கள் மிரட்டல் விடுத்தனா். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதய்பூரில் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் விசாரணை நடத்துவதுடன் இந்த கொலையில் தீவிரவாத அமைப்புகள், வெளிநாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT