முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: சிவசேனை அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனா கட்சியின் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
ஆதித்ய தாக்கரே
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

சிவசேனை கட்சித் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகனும் அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே மற்றும் அமைச்சர் அனில் பிரப் ஆகியோரது வீடுகளிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னதாக , நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீமின் கூட்டாளிகளுக்கு பணப் பரிவா்த்தனை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினா் விவகார அமைச்சா் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், வருமான வரித் துறையினர் சிவசேனையின் முக்கியத் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திவருவது மகாராஷ்டிரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.