முகப்பு
இந்தியா

'காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி மாறும்' - எம்எல்ஏ ராகவ் சதா

நாட்டில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி மாறும் என ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

நாட்டில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி மாறும் என ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. 

இதில் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்து வருகிறது. 

காலை 10. 30 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 83 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பஞ்சாபை ஆம் ஆத்மி கைப்பற்றுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சதா கூறுகையில், 'பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை அமைக்கத் தயாராக உள்ளோம். ஆம் ஆத்மி உயரும்போது பிற வலிமையான சிம்மாசனங்கள் அசைக்கப்படுகின்றன. ஏனெனில் ஆம்  ஆத்மி ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெறவில்லை. அது ஒரு தேசிய கட்சியாக மாறியுள்ளது. நாட்டில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி மாறும்' என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →