இந்தியா

பிரதமர் மோடியின் புதிய இந்தியா கனவு நிறைவேறும்: பொம்மை

DIN


பிரதமர் நரேந்திர மோடியின் 'புதிய இந்தியா' கனவு நிறைவேறும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து வரலாறு படைக்கிறது. உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களிலும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் பொம்மை கூறியதாவது:

"4 மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கும். 2024-இல் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு அமையவுள்ளது தெளிவாகிவிட்டது. பிரதமர் மோடியின் புதிய இந்தியா கனவு நிறைவேறும். கர்நாடகத்தில் 2023-இல் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது."

கர்நாடகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT