முகப்பு
இந்தியா

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் 2 தொகுதிகளிலும் பின்னடைவு

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 10 மார்ச், 2022 at 10:02 AM
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் 2 தொகுதிகளிலும் பின்னடைவு
பகிர்:


நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 பேரவை தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் சட்டப்பேரவையின் 117 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் நிறைவு பெற்றது. இதில் 1304 பேர் போட்டியிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

Advertisement

இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலிதளம், பாஜக ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.