பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் 2 தொகுதிகளிலும் தோல்வி 
இந்தியா

பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் 2 தொகுதிகளிலும் தோல்வி

பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார்.

DIN


சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார்.

பர்னாலா மாவட்டம் பதௌர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் உகோக்கிடம் சரண்ஜித் சிங் தோல்வியைத் தழுவினார். 

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட உகோக், 37,556 வாக்குகள் வித்தியாசத்தில் சன்னியை தோற்கடித்துள்ளார்.

அதுபோல, சன்னி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான ரூப்நகர் மாவட்டம் சம்கௌர் சாஹிப் தொகுதியிலும், ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். சரண்ஜித் சிங் 50 ஆயிரம் வாக்குகள் பெற, அவரது பெயரிலேயே போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் 54 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார்.

பஞ்சாப் மக்கள் அளித்திருக்கும் இந்த தீர்ப்பை தான் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT