சித்து 
இந்தியா

'பஞ்சாப் மக்களின் கட்டளையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்' - நவ்ஜோத் சிங் சித்து ட்வீட்

பஞ்சாப் மக்களின் கட்டளையை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

DIN

பஞ்சாப் மக்களின் கட்டளையை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது

இதில் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருவதனால் அங்கு ஆம் ஆத்மி ஆட்சி உறுதியாகியுள்ளது. 

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் தங்கள் தொகுதிகளில் பின்னடைவில் உள்ளனர். 

இந்நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி குறித்து  மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'மக்களின் குரலே கடவுளின் குரல். பஞ்சாப் மக்களின் கட்டளையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT