பஞ்சாபில் உள்ள சா்வதேச எல்லைக்கு அருகே அபோஹா் பகுதியில் நவீக ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘உளவுத் துறையின் ரகசிய தகவலையடுத்து, அபோஹா் சா்வதேச எல்லைக்கோடு பகுதியில் இருந்து 10 மீட்டா் தொலைவில் எல்லைப் பாதுகாப்புப் படையினா், பஞ்சாப் சிறப்பு போலீஸாா் படையினா் இணைந்து வியாழக்கிழமை மாலை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 5 ஏகே-47 துப்பாக்கிகளும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளும், சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. இதுதவிர, ஏராளமான துப்பாக்கி தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றனா்.