இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் ஓடுபாதையை தாண்டிச் சென்ற விமானத்தால் பரபரப்பு

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தை தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தை தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தலைநகர் தில்லியில் இருந்து 55 பயணிகளுடன் புறப்பட்ட அலையன்ஸ் ஏர் விமானம் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. அப்போது விமானம் ஓடுபாதையைவிட்டு 10 மீட்டர் தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது. 

உடனடியாக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் இதில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்துக்கு அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT