முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் உதவி ஆய்வாளர் பலி; காவலர் படுகாயம்

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் நடத்திய குண்டுவெடிப்பில்  இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துணை உதவி ஆய்வாளர் ஒருவர் கொல்லப்பட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்ஸல்கள் நடத்திய குண்டுவெடிப்பில்  இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துணை உதவி ஆய்வாளர் ஒருவர் கொல்லப்பட்டார். 

சோன்பூர் முகாமிற்கு 3 கிமீ தொலைவில் நடந்த இந்த தாக்குதள்ளில் ஏ.எஸ்.ஐ. ராஜேந்திர சிங் பலியானார். காவல் கண்காணிப்பாளர் சதானந்த் குமார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும் இந்த தாக்குதலில் தலைமைக் காவலர் மகேஷ் படுகாயமடைந்தார். ராய்ப்பூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

இன்று காலை 8.30 மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →