இந்தியா

தில்லியில் குடியரசுத் தலைவருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

DIN

உ.பி. பாஜக முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. அமோக வெற்றி பெற்றதையடுத்து உ.பி. முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத், நேற்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். உ.பி.யில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக நேற்று காலை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். 

இதன் தொடர்ச்சியாக யோகி ஆதித்யநாத், இன்று தில்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இன்று காலை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் யோகி ஆதித்யநாத் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT