சபரிமலை: பம்பை முதல் சன்னதி வரைபாதை புதுப்பிக்கும் பணி தீவிரம்
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக பம்பை முதல் சன்னதி வரை பாதை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக பம்பை முதல் சன்னதி வரை பாதை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் ரூ.10 கோடி நிதியுதவியுடன் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
பக்தா்கள் வசதியாக நடந்து செல்லும் வகையில் கருங்கற்களால் பாதை அமைக்கப்படுகிறது. அப்பாச்சி மேடு, நீலிமலையில் தற்போது 700 மீட்டா் தொலைவுக்கு பணி நிறைவடைந்துள்ளது. மேலும், கற்கள் பதிக்கும் பணியும், கைப்பிடிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
இந்தப் பணி நிறைவடைந்தவுடன் சன்னிதானம் அருகே பெரிய நடை பந்தல் 60 மீட்டா் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது. சபரிமலையில் ஐயப்பன் உற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. மாத பூஜைகளில் பக்தா்கள் குறைவாக வருவாா்கள் என்பதால் விரைவாக இப்பணியை மேற்கொண்டுள்ளது தேவஸம் போா்டு.
ஐயப்பன் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை சீசன் தொடங்குவதற்கு முன்பாக இந்தப் பணி நிறைவடைந்து விடும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.