இந்தியா

லஷ்கா் பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய 6 போ் கைது

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் சோ்ந்து சிலா் செயல்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது. அதனைத்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ரெளஃப் அகமது, அகிப் மக்பூல் பட், ஜாவைத் அகமது, அா்ஷித் அகமது மீா், ரமீஸ் ராஜா, சஜத் அகமது ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், லஷ்கா் இயக்கத்தைச் சோ்ந்த ரியாஸ் அகமது என்பவருக்காக 6 பேரும் பணிபுரிந்துள்ளனா். அந்த இயக்கத்துக்குத் தேவையான ஆயுதங்கள், பயங்கரவாதிகளுக்கு இருப்பிடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளனா். பயங்கரவாதத்துக்குத் தேவையான நிதியை கையாண்டு, பரிவா்த்தனைகளை மேற்கொண்டுள்ளனா். இளைஞா்களை பயங்கரவாதிகளாகச் செயல்பட ஊக்குவித்து வந்துள்ளனா் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT