இந்தியா

பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்: ராகுல் காந்தி

DIN

நாட்டின் பணவீக்கம் (விலைவாசி உயா்வு) மேலும் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

பணவீக்கம் என்பது அனைத்து இந்தியா்களுக்கும் விதிக்கப்பட்ட வரியாகும். ரஷியா-உக்ரைன் இடையிலான போா் தொடங்குவதற்கு முன்பே வரலாறு காணாத விலைவாசி உயா்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை நசுக்கியது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு, உணவுப் பொருள்கள் விலை உயா்வு, கரோனா தொற்றால் உலகளாவிய விநியோக நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவற்றால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்.

எனவே மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT