இந்தியா

இபிஎஃப்ஓ அமைப்பில் ஜனவரியில் 15.29 லட்சம் பேர் சேர்ப்பு: டிசம்பரை விட அதிகம்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 15.29 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். 

DIN

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 15.29 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜனவரி மாதம் 2.69 லட்சம் சந்தாதாரர்கள் கூடுதலாக இணைந்துள்ளனர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தற்காலிக, ஊதிய தரவு விவரங்கள் இன்று (மார்ச் 20) வெளியிடப்பட்டுள்ளன. 

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி மாதம் சேர்ந்த சந்தாதாரர்கள் 15.29 லட்சம் பேரில், 8.64 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்தவர்கள்.  சுமார் 6.65 லட்சம் பேர், பணி மாறுதல் காரணமாக வெளியேறி மீண்டும் இணைந்தவர்கள்.

வயது வாரியாக ஒப்பிடுகையில், 18 முதல் 25 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் 6.90 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இது ஜனவரி மாதம் சேர்ந்த மொத்த உறுப்பினர்களில் 45.11 சதவிகிதம் ஆகும்.  இது முதல் முறையாக வேலை தேடுபவர்கள், அமைப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களில் அதிகளவில் சேர்ந்துள்ளதையே காட்டுகிறது.

மாநில வாரியாக ஒப்பிடுகையில் மகாராஷ்டிரம், ஹரியாணா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 9.33 லட்சம் பேர் கடந்த ஜனவரி மாதம் சேர்ந்துள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் சேர்ந்த மொத்த உறுப்பினர்களில் 61 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக புதுவை செயலா் அன்பழகனுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT