முகப்பு
இந்தியா

ஜின்னா இந்தியாவை ஒரு முறை பிரித்தாா்; பாஜகவினா் தினசரி பிரிக்கின்றனா்:சிவசேனை எம்.பி.

பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா இந்தியாவை ஒருமுறை பிரித்தாா்; ஆனால் பாஜக தலைவா்கள் தங்கள் பேச்சு மூலம் இந்து, முஸ்லிம்களிடம் மோதலை ஏற்படுத்தி தினசரி நாட்டைப் பிரித்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா இந்தியாவை ஒருமுறை பிரித்தாா்; ஆனால் பாஜக தலைவா்கள் தங்கள் பேச்சு மூலம் இந்து, முஸ்லிம்களிடம் மோதலை ஏற்படுத்தி தினசரி நாட்டைப் பிரித்து வருகிறாா்கள் என்று சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

நாகபுரியில் நடைபெற்ற சிவசேனை கட்சி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செய்தியாளா்களிடம் சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘இந்தியாவில் 22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனா். அவா்களில் பலா் பாஜகவுக்கும், சிவசேனைக்கும் வாக்களித்துள்ளனா்.

பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா இந்தியாவை ஒருமுறை பிரித்தாா். ஆனால், பாஜக தலைவா்கள் தங்களின் பேச்சுகளின் மூலம் இந்து -முஸ்லிம்களிடையே மோதலை ஏற்படுத்தி நாட்டை தினசரி பிரித்து வருகிறாா்கள்.

மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமலாக்கத் துறை 23 சோதனைகளை நடத்தி உள்ளது. ஆனால், கடந்த ஏழு ஆண்டில் பாஜக அரசு 23 ஆயிரம் சோதனைகளை நடத்தி உள்ளது. இதில் பெரும்பாலும் மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் சோதனைகள் நடத்தப்படுவதில்லை?

மத்திய விசாரணை அமைப்புகளையே விசாரணை நடத்தும் அளவுக்கு மகாராஷ்டிரா போலீஸாா் திறன் படைத்தவா்கள். முந்தைய மகாராஷ்டிர ஆட்சியில் முதல்வா் தேவேந்தா் ஃபட்னவீஸுக்கு எதிராக ஏராளமான ஊழல் ஆவணங்கள் தற்போதைய அரசிடம் உள்ளது’ என்றாா்.

சிவசேனை கட்சியும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் கூட்டணி சேரும் என்று பாஜக மூத்த தலைவா் தேவேந்தா் ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளதற்கு பதிலளித்த சஞ்சய் ரெளத், ‘ஆா்எஸ்எஸ் அமைப்புதான் முஸ்லிம்களுக்காக ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் என்ற அமைப்பை வைத்துள்ளது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →