பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 
இந்தியா

35,000 தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய முடிவு: பஞ்சாப் முதல்வர்

பஞ்சாபில் தற்காலிக அரசுப் பணியாளர்களாக இருக்கும் 35 ஆயிரம் பேரை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

பஞ்சாபில் தற்காலிக அரசுப் பணியாளர்களாக இருக்கும் 35 ஆயிரம் பேரை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரியளவிலான வெற்றியை பதிவு செய்த ஆம் ஆத்மி ஆட்சி அமைத்துள்ளது. மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இன்று பகவந்த் மான் வெளியிட்ட அறிவிப்பில்,

“பஞ்சாப் மாநிலத்தில் குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவுகளில் பணிபுரிந்து வரும் 35,000 தற்காலிக பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இனி வரும் காலங்களில் தற்காலிக ஒப்பந்த முறையிலும், வெளி நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்யும் முறைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு தலைமைச் செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT