கோப்புப்படம் 
இந்தியா

2021-22ல் ரயில்வேயில் 120 மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்: மத்திய அரசு

இந்திய ரயில்வே 2021-22 ஆம் ஆண்டில் 120 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

DIN

புது தில்லி: இந்திய ரயில்வே 2021-22 ஆம் ஆண்டில் 120 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது 2020-21 புள்ளிவிவரங்களை விட 69%  குறைவு என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று தெரிவித்தார்.

2020-21 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் மொத்தம் 383 மாற்றுத்திறனாளிகளை ரயில்வே பணியமர்த்தியுள்ளது என்று அவர் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

இந்திய ரயில்வே 2019-20 ஆம் ஆண்டில் 1,053 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  கூறினார்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016-ஐ மீறும் வழக்குகள் எதுவும் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு வரவில்லை என்று வைஷ்ணவ்  குறிப்பிட்டு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய அரங்கல்துருகம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 8% சரிவு!

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

SCROLL FOR NEXT