முகப்பு
இந்தியா

நவாப் மாலிக் ராஜிநாமா செய்யக்கோரி மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்

நவாப் மாலிக்கை ராஜினாமா செய்யக் கோரி மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

நவாப் மாலிக்கை ராஜினாமா செய்யக் கோரி மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

கடந்த பிப்ரவரி 23-ஆம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட மாநில அமைச்சர் நவாப் மாலிக் பதவி விலகக் கோரி மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெளியே பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ.,க்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சருமான நவாப் மாலிக், தாவூத் இப்ராஹிமின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 4 வரை சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 

இதையடுத்து மாலிக் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 25-ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.