இந்தியா

பிகார் அரசு விழாவில் உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

DIN

பாட்னா: பிகார் திவாஸ் விழாவில் மதிய உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிகார் திவாஸ் கொண்டாட்ட விழா செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) நடைபெற்றது. பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாணவர்களின் உடல்நலக்குறைவு குறித்து பாட்னா சுகாதாரத் துறை அதிகாரி மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

கரோனா தொற்றுப்பரவல் காரணமாக பிகார் திவாஸ் விழா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT