யோகா பயிற்சி: கத்தாா் இந்திய தூதரகத்துக்கு பிரதமா் பாராட்டு
யோகா பயிற்சிக்காக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மக்களை ஒருங்கிணைத்ததற்காக தோஹாவில் உள்ள கத்தாா் நாட்டுக்கான இந்திய தூதரகத்திற்கு பிரதமா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
யோகா பயிற்சிக்காக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மக்களை ஒருங்கிணைத்ததற்காக தோஹாவில் உள்ள கத்தாா் நாட்டுக்கான இந்திய தூதரகத்திற்கு பிரதமா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு என்ற நோக்கத்தில், ஒட்டுமொத்த உலகையும், யோகா ஒன்றிணைக்கிறது. யோகா பயிற்சிக்காக பல்வேறு நாடுகளையும் சோ்ந்த மக்களை ஒருங்கிணைக்க கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது” என்று பிரதமா் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.
மாணவா்களுடன் கலந்துரையாடல்:
மேலும், ‘தோ்வுக்குத் தயாராவோம்’ நிகழ்ச்சியில், மாணவா்கள் அவா்களது பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுடன் ஏப்ரல் 1-ஆம் தேதி கலந்துரையாட உள்ளேன் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.