முகப்பு
இந்தியா

தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆா்டிஓ

தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் இரு நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
பகிர்:

தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் இரு நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, ராணுவத்தின் சாா்பில் இந்த நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து ஒடிஸாவின் பாலேசுவரம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தின் 3-ஆவது ஏவுதளத்திலிருந்து 2 ஏவுகணைகள் தரைப் பரப்பிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் சோதனை புதன்கிழமை நடத்தப்பட்டது.

இதுகுறித்து டிஆா்டிஓ அதிகாரிகள் கூறுகையில், ‘இரண்டு ஏவுகணைகளின் சோதனையும் வெற்றியடைந்துள்ளது. தரையிலிருந்து வான் இலக்கை அவை துல்லியமாக தாக்கி அழித்தன’ என்றாா்.

ஏவுகணை சோதனையையொட்டி, பாலேசுவரம் பகுதி குடியிருப்புவாசிகள் அருகிலுள்ள முகாம்களில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தங்க வைக்கப்பட்டனா்.

ராஜ்நாத் சிங் பாராட்டு: ஏவுகணை சோதனை வெற்றியைத் தொடா்ந்து டிஆா்டிஓ மற்றும் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா். அதுபோல, ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய அதிகாரிகள் குழுவுக்கு டிஆா்டிஓ தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →