உச்சநீதிமன்றத்தில் ஏப்.4 முதல் நேரடி விசாரணை
உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதிமுதல் வழக்கு விசாரணை நேரடியாக நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா புதன்கிழமை அறிவித்தாா்.
உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதிமுதல் வழக்கு விசாரணை நேரடியாக நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா புதன்கிழமை அறிவித்தாா்.
மேலும், வழக்குரைஞா்கள் விரும்பினால் திங்கள்கிழமையும், வெள்ளிக்கிழமையும் காணொலி விசாரணைக்கான இணைப்பு (லிங்க்) வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்புக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் விகாஷ் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளாா். உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை அன்றாட அலுவல் பணி தொடங்குவதற்கு முன்பாக இந்த அறிவிப்பை தலைமை நீதிபதி என்.வி. ரமணா வெளியிட்டாா்.