இந்தியா

நிகழாண்டில் 7 செயற்கைக்கோள்கள்விண்ணில் செலுத்தப்படும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

நிகழாண்டில் இஸ்ரோ 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியுள்ளாா்.

DIN

நிகழாண்டில் இஸ்ரோ 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியுள்ளாா்.

இதுகுறித்து மக்களவையில் புதன்கிழமை கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘‘பிஎஸ்எல்வி சி-52 செலுத்து வாகனம் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ்-4 கடந்த பிப்ரவரி 14-இல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளியின் சுற்று வட்டப்பாதையில் செயல்படுவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை நானோ செயற்கைக்கோள்களில் முதலாவதான ஐஎன்எஸ்- 2டிடி-யும் இதனுடன் அனுப்பப்பட்டது. இதேபோல, நிகழாண்டில் இஸ்ரோ 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியன்ஸ் லீக்: அடுத்த சுற்றுக்குத் தேர்வான, வெளியேறிய அணிகளின் விவரங்கள்!

மும்மூர்த்திகள் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

SCROLL FOR NEXT