எல்.ஐ.சி.யின் பொது பங்கு விற்பனை இன்று தொடக்கம்
நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுதில்லி: நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பொது பங்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை மே 4 ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது.
இன்று தொடங்கி மே 9-ம் தேதி வரை நடைபெறும் அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) 5 சதவீத பொது பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.21,000 கோடி ஆகும்.
Advertisement
Advertisement
மேலும் எல்.ஐ.சி.யின் ஒரு பொதுபங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.