முகப்பு
இந்தியா

கேதார்நாத் கோயில் நடை திறப்பு: முதல்வர் தாமி வழிபாடு

கேதார்நாத் கோயிலின் நடை பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கேதார்நாத் கோயிலின் நடை பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் அவரது மனைவி கீதா தாமியும் வழிபாடு மேற்கொண்டனர். 

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலின் நுழைவுவாயில் இன்று திறக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

வேத மந்திரங்கள் முழங்கக் கோயிலின் நடை இன்று திறக்கப்பட்டன. கோயில் முழுவதும் மொத்தம் 15 குவிண்டால் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

சார்தாம் கோயிலில் கங்கோத்ரி, யமுனோத்ரி  கோயில்கள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், கேதார்நாத் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து இம்மாத 8-ம் தேதி பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.