முகப்பு
இந்தியா

வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ. 7,183. 42 கோடி விடுவிப்பு

நிதிப் பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 2-வது மாதத் தவணை தொகையாக, 14 மாநிலங்களுக்கு ரூ. 7,183. 42 கோடியை வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

நிதிப் பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 2-வது மாதத் தவணை தொகையாக, 14 மாநிலங்களுக்கு ரூ. 7,183. 42 கோடியை வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

ஆந்திரம், அஸ்ஸாம், இமாசல பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதிப் பகிா்வுக்கு பிந்தையை வருவாய் பற்றாக்குறை மானியமாக 2022-23-ம் நிதியாண்டிற்கு மொத்தம் ரூ.86,201 கோடியை அளிக்க 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

இந்தத் தொகை சமமான 12 மாத தவணைகளில் விடுவிக்கப்படுகிறது. இதன்படி 2-ஆவது மாதத் தவணை தொகையாக ரூ. 7,183. 42 கோடியை மத்திய நிதியமைச்சகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுவிக்கப்பட்ட தொகையுடன் இதுவரை மொத்தம் ரூ.14,366.84 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.