காவலர் தேர்வு வினாத்தாள் முறைக்கேடு செய்தவர்களை சும்மா விடமாட்டேன் : ஹிமாச்சல் பிரதேஷ் முதலமைச்சர்
புது தில்லி: காவலர் தேர்வு வினாத்தாள் முறைக்கேட்டில் ஈடுபட்ட ஒருவரையும் தண்டிக்காமல் விடமாட்டேனென ஹிமாச்சல பிரதேஷ் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.
புது தில்லி: காவலர் தேர்வு வினாத்தாள் முறைக்கேட்டில் ஈடுபட்ட ஒருவரையும் தண்டிக்காமல் விடமாட்டேனென ஹிமாச்சல பிரதேஷ் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்த வருட மார்ச் மாதம் 27இல் 1700 காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைப்பெற்றது. வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து, ஹிமாச்சல் அரசு எழுத்துத் தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும் சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
"குற்றம் செய்த ஒருவரும் தப்பிக்க முடியாது. இதெற்கென சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்திருக்கிறேன். யாரும் குற்றம் சொல்லமுடியாத படி தேர்வை ரத்து செய்கிறோம். இனி வரும் விசாரணையில் பலர் கைது செய்யக்கூடும்" என்று முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை அறிவியல் மற்றும் தொழில்பண்பட்ட முறையிலும் விசாரிக்க இருப்பதாக சிறப்பு குழு கூறியுள்ளது.காவல் துறையினரின் தகவலின் படி இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.