முகப்பு
இந்தியா

தேர்வில் ஹிந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் இடையேயான ஒற்றுமை குறித்து கேள்வி

பிரபல தனியார் பல்கலைக்கழகமான சாரதா பல்கலையில் தேர்வில் ஹிந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன என கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையான நிலையில் அதற்கு அறிக்கை சமர்பிக்குமாறு யுஜிசி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

பிரபல தனியார் பல்கலைக்கழகமான சாரதா பல்கலையில் தேர்வில் ஹிந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன எனக் கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையான நிலையில் அதற்கு அறிக்கை சமர்பிக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள சாரதா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் முதலாமாண்டு அரசறிவியல்(பொலிட்டிகல் சயின்ஸ்) மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் ஹிந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் இடையேயான ஒற்றுமைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பியதால் பெரிய சர்ச்சை உருவானது.

இந்நிலையில், தற்போது இதனை உறுதிப்படுத்திய பின்பு எதற்காக இப்படியான கேள்வி கேட்கப்பட்டது என சாரதா பல்கலைக்கழகத்திடம் யுஜிசி(பல்கலை மானியக் குழு) விளக்க அறிக்கையை கேட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments