நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவுடன் பிரதமா் நரேந்திர மோடி. 
இந்தியா

மே 16ல் நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வருகிற 16 ஆம் தேதி நேபாளம் செல்கிறார்.

DIN

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வருகிற 16 ஆம் தேதி நேபாளம் செல்கிறார்.

மே 16 ஆம் தேதி புத்த பூர்ணிமா நிகழ்வை முன்னிட்டு பிரதமர் மோடி, நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினிக்குச் செல்லவிருக்கிறார். 

நேபாள பிரதரின் அழைப்பை ஏற்று வருகிற 16 ஆம் தேதி பிரதமர் மோடி இந்த பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

லும்பினியில் உள்ள மாயாதேவி கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர், புத்த பூர்ணிமாவையொட்டி அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். மேலும் இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளனர். 

கடந்த 2014 முதல் ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி, நேபாளம் செல்வது குறிப்பிடத்தக்கது. 

நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா, கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுப்பாட்டை இழந்து 5 போ் மீது மோதிய காா்: இளைஞா் உயிரிழப்பு

சேவை குறைபாடு: கட்டுமான நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நபா் சிறையில் அடைப்பு

வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திமிரி ஒன்றிய நியமனஉறுப்பினா் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT