முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர்: அரசு ஹெலிகாப்டர் விபத்து; 2 விமானிகள் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் விமானிகள் இருவர் பலியாகினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் விமானிகள் இருவர் பலியாகினர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் பயற்சி மேற்கொண்டிருந்த அரசு ஹெலிகாப்டர் நேற்று இரவு ஓடுபாதையில் திடீரென விபத்திற்க்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே ஒரு விமானியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மற்றொரு விமானியும் பலியாகினர்.

தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கான காரணமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →