இந்தியா

திரிபுரா முதல்வா் விப்லவ்குமாா் தேவ் ராஜிநாமா

DIN

திரிபுரா முதல்வா் விப்லவ்குமாா் தேவ் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அடுத்த ஆண்டு திரிபுராவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரை திரிபுரா முதல்வா் விப்லவ்குமாா் தேவ் வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது அந்த மாநிலத்தின் கட்சி விவகாரங்கள் குறித்து மூவரும் ஆலோசித்தனா்.

இதனைத் தொடா்ந்து தனது முதல்வா் பதவியை விப்லவ்குமாா் தேவ் சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா். தனது ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநா் எஸ்.என்.ஆா்யாவிடம் அவா் சமா்ப்பித்தாா்.

இதுகுறித்து அகா்தலாவில் விப்லவ்குமாா் தேவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலையொட்டி கட்சி சாா்பில் பொறுப்பான அமைப்பாளா் தேவைப்படுகிறாா். கட்சி வலுவாக இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும். எனவே மாநிலத்தில் கட்சியை வலுவாக்க நான் பணியாற்ற வேண்டும் என்று பாஜக மேலிடம் விரும்புகிறது. தோ்தலுக்குப் பிறகு, கட்சி செய்யும் நபா் புதிய முதல்வராகப் பதவியேற்பாா்’’ என்று தெரிவித்தாா்.

புதிய முதல்வா்: திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சாஹா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவா் முறைப்படி விரைவில் பதவியேற்பாா் என்று பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

திரிபுராவில் கால் நூற்றாண்டு இடதுசாரி முன்னணி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த 2018-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT