இந்தியா

நேபாளம்: லும்பினி மாயாதேவி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நேபாளத்தின் லும்பினியில் உள்ள மாயா தேவி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

DIN

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நேபாளத்தின் லும்பினியில் உள்ள மாயா தேவி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

கௌதம புத்தரின் பிறந்த இடமான லும்பினியில் உள்ள புனிதத் தலமான மாயாதேவி கோயிலுக்கு நேபாள நாட்டுப் பிரதமர் ஷேர் பகதூர் தேயூபாவுடன் பிரதமர் மோடி வழிபாடு செய்தார் என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

புத்தரின் பிறந்த இடத்தில், மார்க்கர் கல்லில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் பௌத்த முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டது. 

மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

லும்பினியில் அன்பான வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 

புத்த பூர்ணிமாவின் இந்த நாளில் நேபாளத்தின் அற்புதமான மக்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி. லும்பினியில் நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் என்று பிரதமர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் நேபாளத்துக்குச் செல்வது இது ஐந்தாவது முறையாகும்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

மின்சாரம் பாய்ந்ததில் கணவா் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற மனைவி காயம்

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த ஹரியாணா இளைஞா் கைது

கனடா: பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

SCROLL FOR NEXT