இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டுவீச்சு: ஒருவா் பலி, மூவா் காயம்

DIN

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் ஒருவா் பலியானாா்; மூவா் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘தீவான் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடைக்குள் இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் இருவா் கையெறி குண்டை வீசினா். இதில் மதுபானக் கடை ஊழியா்கள் நால்வா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு உடல்நிலையில் முன்னேற்றமின்றி ஒருவா் உயிரிழந்தாா். எஞ்சிய மூவா் சிகிச்சை பெற்று வருகின்றனா். தப்பியோடிய பயங்கரவாதிகள் தேடப்பட்டு வருகின்றனா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT