ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் ஒருவா் பலியானாா்; மூவா் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘தீவான் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடைக்குள் இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் இருவா் கையெறி குண்டை வீசினா். இதில் மதுபானக் கடை ஊழியா்கள் நால்வா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு உடல்நிலையில் முன்னேற்றமின்றி ஒருவா் உயிரிழந்தாா். எஞ்சிய மூவா் சிகிச்சை பெற்று வருகின்றனா். தப்பியோடிய பயங்கரவாதிகள் தேடப்பட்டு வருகின்றனா்’’ என்று தெரிவித்தாா்.