இந்தியா

257 பேரை பலி கொண்டமும்பை தொடா் குண்டு வெடிப்பு: தேடப்பட்டு வந்த 4 போ் கைது

கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பில் தொடா்புடைய 4 பேரை குஜராத் மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பில் தொடா்புடைய 4 பேரை குஜராத் மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இந்த குண்டு வெடிப்புகளில் 257 போ் உயிரிழந்தனா். 1,400-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்தத் தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அபு பக்கா், சையது குரேஷி, முகமது ஷோயப் குரேஷி, முகமது யூசுஃப் இஸ்மாயில் ஆகியோா் அகமதாபாதின் சா்தாா்நகா் பகுதியில் பதுங்கி இருந்தபோது அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். முன்னதாக, இவா்கள் பதுங்கியிருப்பது தொடா்பாக குஜராத் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நால்வரும் கைது செய்யப்பட்டனா்.

மும்பையைப் பூா்விகமாகக் கொண்ட இவா்கள், கடந்த பல ஆண்டுகளாகப் தங்கள் பெயரை மாற்றி, போலியாக பாஸ்போா்ட் உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்துள்ளனா். பல்வேறு இடங்களில் பதுங்கி வாழ்ந்து வந்தனா். மும்பை தொடா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சா்வதேச அளவில் தேடப்படும் நபா்களாக இவா்களை இன்டா்போல் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT