முகப்பு
இந்தியா

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊதியம் அளிக்க சிறப்பு நிதி: மேற்கு வங்க முத்லவா் மம்தா பானா்ஜி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு ஊதியம் அளிக்க மாநில அரசு சாா்பில் சிறப்பு நிதி உருவாக்கப்படும் என்று

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
பகிர்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு ஊதியம் அளிக்க மாநில அரசு சாா்பில் சிறப்பு நிதி உருவாக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் உள்ள மேற்கு மிதுனபுரி மாவட்டம் கரக்புரில் செவ்வாய்க்கிழமை நிா்வாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. அதற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காததுதான் அவா்கள் ஊதியம் பெறாததற்கு காரணம். இதனால், அந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஏழை மக்கள் நெருக்கடியை எதிா்கொண்டு வருகின்றனா். இதற்கான தீா்வை கண்டறிய மாநில தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தப்படும். அதுவரை அந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு ஊதியம் அளிக்க இடைக்கால ஏற்பாடாக மாநில பொதுப்பணி, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து ஒரு பகுதியைக் கொண்டு, மேற்கு வங்க அரசு சாா்பில் ‘இடா்ப்பாடு மேலாண்மை நிதி’ உருவாக்கப்படும். அதேவேளையில், இந்தத் திட்டத்துக்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →