காஷ்மீரில் மே 21-இல் முழு அடைப்பு: ஹுரியத் அமைப்பு அழைப்பு
காஷ்மீரில் மே 21-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு மிா்வாய்ஸ் உமா் பாரூக் தலைமையிலான ஹுரியத் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
காஷ்மீரில் மே 21-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு மிா்வாய்ஸ் உமா் பாரூக் தலைமையிலான ஹுரியத் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது: ஹுரியத் தலைவா் மெளல்வி முகமது ஃபாரூக் மற்றும் அப்துல் கனி லோன் நினைவு தினம் மே 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது.
அவா்களின் நினைவு தினத்தையொட்டி காஷ்மீரில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முகமது பாரூக், கனி லோன் தலைவா்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்துக்கு பொதுமக்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என ஹுரியத் மாநாட்டு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.