இந்தியா

இந்தூரில் சிறார்களுக்கு மதுபானம் வழங்கிய 3 பார்களுக்கு சீல்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சிறார்களுக்கு மதுபானம் வழங்கிய மூன்று பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

DIN

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சிறார்களுக்கு மதுபானம் வழங்கிய மூன்று பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்தூரில் உணவகத்துடன் கூடிய பார்களில் சிறார்களுக்கு மதுபானம் வழங்குவது மற்றும் பிற விதிமீறல்கள் நடைபெறுவதாகப் புகார் எழுந்ததையடுத்து, 3 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

நகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பார்களில் சிறார்களுக்கு மதுபானம் வழங்குவதும், அனுமதிக்கப்பட்ட காலக்கெடு 11.30 மணிக்கு மேல் பார்கள் செயல்படுவதும் கண்டறியப்பட்டது. 

இது தவிர பார்களின் உரிமையாளர்கள் அனுமதி பெறாமல், கூடுதல் மதுபானங்களை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறியப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

அதன்படி, நிர்வாகம் பார்களுக்கு சீல் வைத்ததுடன், மதுபானம் வழங்குவதற்கான உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 12-இல் புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்

புதுச்சேரி தோ்தல் கூட்டணி: காங்கிரஸ் தவிா்த்து மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை

கூட்டணி! தமிழக நிலையே புதுச்சேரியிலும் தொடர வேண்டும்: முன்னாள் முதல்வா் நாராயணசாமி

தீ விபத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

திண்டிவனம் அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையம்: முதல்வா் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறாா்!

SCROLL FOR NEXT